Wednesday, March 31, 2021

இன்று மீண்டும் தற்செயல் 31/03/2021

இன்று மீண்டும் தற்செயல் 31/03/2021

ஜெய்பூரில் இருக்கும் சக அதிகாரி ஒருவர் நாடு முழுதும் இருக்கும் என் இலாகா வை சேர்ந்த பிராந்திய அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பி, சில தகவல்கள் கேட்கிறார் . செய்து வந்து 8 நிமிடம் ஆகிறது , 9 ஆவது நிமிடத்தில் நான் அவரை தொடர்பு கொண்டு அதில் ஒரு சந்தேகத்தை கேட்க நினைத்து அவரது பெயரை கணிணினியில் தேடி செய்தி அனுப்ப முனைகிறேன் , அடுத்த நொடியே அவர் என்னை தொலை பேசியில் அழைக்கிறார் , அவர் அழைத்த காரணம் , நான் கேட்ட அதே சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டி தான் அழைத்துள்ளார் .

அது எப்படி இந்த மாதிரி தற்செயல் நடக்கும் . எனக்கு இது வாடிக்கையாகி விட்டது . யாரை நினைக்கிறோமோ அவர் தொடர்பு கொள்வார் , அல்லது யாரவது நம்மை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில் நமக்கு தெரிந்து விடுகிறது . இதில் ஏதோ ஒன்று தான் இந்த தற்செயல்கள் நடப்பதற்கு காரணம்.

No comments:

Post a Comment

அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...