26.02.2021 : எனது முதல் பதிவுக்கு பிறகு எனது அலுவலகத்தில் உள்ள இன்னொரு நண்பரை அழைத்து , நான் புதிதாக பிளாக் ஆரம்பித்து உள்ளேன், நான் ஏற்கனவே கூறி உள்ளது போல எனது அதிசயமான அனுபவங்களை பதிவு செய்து வைக்க இது ஒரு சிறந்த இடமாக இருக்கும். அந்த பிளாக்கில் சென்று உங்களால் அதனை படிக்க முடிகிறதா என்று பாருங்கள், இப்போது தான் முதல் பதிவு இட்டுள்ளேன் என்றேன் . சரி என்று அவர் சென்று பார்த்து படிக்க முடிகிறது , கமெண்ட் போட முடியும் , ஷேர் செய்ய முடியும் , நன்றாக உள்ளது என்று கூறினார் . பின்னர் முதல் பதிவை படித்து பார்த்து கருத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறினார் . மேலும் ஒரு 30 செகண்ட் இருக்கும் , அவர் படிக்க ஆரம்பித்து இருப்பார் , அப்போது எண்ணில் எண்ணம் தோன்றி , அவருக்கு இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது , நீ அதற்க்கு விளக்கம் கொடு என்று வந்தது . உடனே அவருக்கு செய்தி தட்டச்சு செய்து "தஸ்தாவேஜு என்றால் சொத்து பத்திரம் " என்று பொருள் என்று கூறினேன். உடனே அவர் " ஆமாம் சார் இப்போது தான் உங்களிடம் கேட்கலாம் என்று எண்ணினேன் " என்றார் . எனக்கு எப்படி உடனே தெரிந்தது - ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் , அப்போ, இதுவும் ஒரு தற்செயல் தான் , முன்னர் போட்ட அனுபவமும் ஒரு தற்செயல் தான் , இதையும் பதிவு செய்வோம் என்று அவரிடம் கூறினேன் . அவர் "நிச்சயம் பதிவு செய்யுங்கள் அய்யா " என்று உரைத்தார் . மேலும் , அலுவலகத்தில் , எனது நண்பர் வந்து என்னை விசாரிக்கவும், "அவர் இன்று வரவில்லை வீட்டில் இருந்தபடியே வேலை செய்கிறார் " என்று அவரிடம் கூறினேன் என்றும் ஏற்கனவே போட்ட பதிவை மேலும் உறுதிப்படுத்தினார் . அதாவது என் அலுவலக நண்பர் என்னை தொடர்பு செய்ய முயற்சி செய்துள்ளார் , அது யாரும் சொல்லாமலே எனக்கு தெரிந்து, அவருக்கு என்ன வேண்டும் என்று தெளிவாக தெரிந்து நான் ஏற்பாடு செய்துள்ளேன் . எனக்கு அவர் போன் நம்பர் கிடைக்கவில்லை என்ற போது அவரே போன் செய்து பேசி உள்ளார் . கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் , அவர் போன் செய்தது நான் டாகுமெண்ட் தேடும் பொது போட்டோ பிடிக்கும் போதோ , அதனை edit செய்யும் போதோ இல்லாமல் , மிகச்சரியாக நான் அவரை நினைக்கும் பொது அழைத்துள்ளார்.
நன்றி வணக்கம் . இந்த பதிவு இத்துடன் முற்றிற்று ......
No comments:
Post a Comment