Saturday, February 27, 2021

28/02/2021 - அதிசயங்களை தேடுபவர்களுக்கு இந்த பதிவு , என்ன செய்வது சிறிய சிறிய நிகழ்வுகளை கூட கவனித்து பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.

28/02/2021 - அதிசயங்களை தேடுபவர்களுக்கு இந்த பதிவு , என்ன செய்வது சிறிய சிறிய நிகழ்வுகளை கூட கவனித்து பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. தினமும் ஏதாவது அதிசயத்தை , இறை செயலை பதிவு செய்ய வேண்டும் என்பது என் உல் மனதில் எழுந்துள்ள கட்டளை. அதற்கு ஏற்றார் போல இறைவன் எனக்கு அனுபவங்களை கொடுக்குமாறு வேண்டுகிறேன் . எனக்கு நல்ல கண்களை கொடுங்கள் - இறை சக்தியை கண்டு உணர  வேண்டும் , நல்ல காதுகளை கொடுங்கள் - இறை சக்தியை கேட்டு உணர வேண்டும் . நல்ல அறிவையும் புத்தியையும் கொடுங்கள் , இறைவனை உணர்ந்து எழுத்தால் வடிக்க வேண்டும் , மற்றவருக்கும் உணர்த்த வேண்டும் என்ற ப்ரார்தனையோடு இந்த சிறு பதிவு  இன்று

நேற்று பரம சித்தர் பீடம் சென்று வந்ததை தட்டச்சு செய்து கொண்டு இருக்கும் போது , நான் ஒன்றை டைப் அடிக்கிறேன் , வேறு ஒன்று விழுகிறது . ஆங்கில எழுத்தில் தட்டச்சு செய்து , அதனை கூகிள் மூலம் தமிழ் எழுத்தாக மாற்றும் கருவியை உபோயோகப்படுத்தி வருகிறேன் . உதாரணமாக ஆங்கிலத்தில் Agathiyar என்று டைப் செய்தால் அதுவே தமிழ் எழுத்துக்களாக மாறி "அகத்தியர்" என்று தட்டச்சு செய்து கொடுக்கும். இப்படி தட்டச்சு செய்யும் போது பரம சித்தர் யார் என்று எழுதுகிறேன் . " அவர் அகதியருடன் ஒன்றற கலந்தவன் " என்று தட்டச்சு செய்யும் போது , அது " காலத்தவன் " என்று விழுகிறது . பரம சித்தரும் அகத்தியரும் வாழ்ந்த காலங்கள் ஒன்றே . ஒன்றாய் இருந்தவர்கள் , சில காரணங்களால் பிரிந்து மீண்டும் பரம சித்தர் அகதியருடன் இணைந்தார் . இதனை அகத்தியர் எனக்கு உணர்த்தவே software மென்பொருளில் மாற்றம் செய்து உணர்த்தி "காலத்தவன் " என்று வார்த்தை விழுமாறு செய்தார் . இதில் என்ன பெரிய அதிசயம் என்று நீங்கள் கேட்கலாம். ஒன்றை டாய் செய்தால் வேறு வார்த்தை வந்து விழுவது எவ்வாறு ? வேறு வார்த்தை விழுந்தால் அர்த்தம்  உள்ள வார்த்தையாக விழா வேண்டும் என்ற அவசியம் இல்லை ; அர்த்தம் உள்ள வார்த்தையாக விழுந்தாலும் , அர்த்தம் பொருத்தமாக உள்ள வார்த்தை யாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை . இதில் நமது செயல் யாது , டைப் செய்யும் பொது கூடவே எம் அய்யன் இருக்கிறார் என்பதை உணர்த்தி கொண்டு இருக்கிறார் , இதுவும் இறை செயல் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் . ஒருவேளை எனக்கு பயித்தியம் பிடித்து இருக்கலாம் , அகத்தியர் மேல் பயித்தியமாக இருக்கலாம் - எனது பிதற்றல்களை பொருட்படுத்த வேண்டாம் . நான் அப்படித்தான் ஏதாவது உளறி கொட்டி கொண்டே இருப்பேன்  என் உளறல்களில் சில உளவுகள் இருக்கலாம் , உங்களுக்கு ஏதாவது கிடைத்தால் எடுத்து கொள்ளுங்கள் , இல்லேயேல் இது வேறு குப்பை . தவறாக கொள்ள வேண்டாம் . நான் ஒரு பயித்தியம் என்று நினைத்து புறக்கணித்து விடுங்கள் . நன்றி





No comments:

Post a Comment

அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...