Wednesday, March 24, 2021

நமது பொகளூர் அகத்தியர் பீடத்தில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் - பாகம் 1


தொலைந்த
பொருள் திரும்ப கிடைத்தல்

 

ஒரு நாள் அகத்தியர் பீடத்துக்கு சென்று விட்டு அபிஷேக பூஜைகளை பார்த்து விட்டு வீடு திரும்பி காரில் வந்து கொண்டு இருந்தேன் . மிகவும் சோர்வாக இருந்ததால் ட்ரைவர் அமர்த்தி தான் காரில் சென்றேன் . அவர் தான் ஒட்டி கொண்டு வந்தார் . இன்று என் மகனின் பிறந்த நாள் , அகத்தியர் பீடத்தில் இருந்து வந்து நேராக வீட்டுக்கு வராமல் கேக் கடைக்கு சென்று , கேக் வாங்குவதற்கு சென்றேன். உள்ளே சென்று 5 ஆவது ம்=நிமிடத்தில் அலைபேசியை தேடினேன் , காணவில்லை . காரில் சென்று பார்த்தேன் அங்கே இல்லை , கடை வாசலில் விழுந்து இருக்கிறதா என்று பார்த்தேன் அங்கே இல்லை . அலைபேசி சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டு இருந்தது. காரில் வரும் போது பல போன்கால் கால்கள் பேசி கொண்டு தான் வந்தேன் . இறங்கும் போது என்னிடம் இல்லை . அப்போது நிச்சயம் காரில் தான் இருந்திருக்க வேண்டும் . அந்த அலைபேசி விலை 27000, புதியது , மேலும் பீடத்தில் எடுத்த பல புகைப்படங்கள் அதில் தான் உள்ளன . பல தொலை பேசி எண்கள் , ஆபீஸ் விஷயங்கள் , குடும்ப படங்கள் போன்றவை உள்ளன . 27000 நஷ்டம் . எங்கே சென்று தேடுவது என்று தெரியவில்லை , கடாயில் உள்ள CCTV கேமெராவில் பார்த்த பொது , உள்ளே நுழையும் போது சட்டை பாக்கெட்டில் மொபைல் இல்லை என்று தெரிந்தது . கடைக்குள் கொண்டு வந்து தொலைக்கவில்லை . அப்போ காருக்கும் கடைக்கும் இடைப்பட்ட தூரத்தில் விழுந்திருக்கலாம் , யாரவது எடுத்து சென்றிருக்கலாம் அல்லது காரில் வைத்ததை ட்ரைவர் எடுத்து வைத்து கொண்டு இருக்கலாம் . என்ன செய்வது என்று தெரியவில்லை . ட்ரைவர் , நான் மொபைலும் பார்க்கவில்லை எடுக்கவும் இல்லை என்று .  என்னிடம் இருந்து மொபைல் கீழே விழவே இல்லை என்று தெளிவாக தெரிந்தது . 27000 மொபைல் மாயமானது .

 

குருஜியிடம் அழைத்து கேட்டேன் , அவரோ த்யானத்தில் அமர்ந்து பார்த்து அது விழுந்த இடத்திலே தான் இருக்குது , வேற எங்கேயும் போகல , என்று கூறினார் . கூகிள் இல் find my device என்ற அப்பிளிக்கேஷன் மூலம் மொபைல் எங்கே இருந்தது என்று பார்த்த போது , அது மிக சரியாக கடை வாசலில் கார் நின்ற இடத்தை காட்டியது . எனவே ட்ரைவர் எடுத்து வைத்து கொண்டு பொய் சொல்கிறார் என்று போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்பளைண்ட் கொடுக்க சென்றேன் . அவர்களோ அவனவன் அடிதடி கொலை கொள்ளை கலாட்டா கேஸ்களை பார்ப்போமா ,இல்லை உன் போல பொறுப்பில்லாமல் மொபைலை தொலைத்து விட்டு தேடும் உனக்கு தேடி கொடுப்பது தான் எங்கள் வேலையா என்று சத்தம் போட்டனர் . சரி நம் மொபைல் அவ்வளவு தான் என்று நினைத்தேன் . . 100 முறை அழைத்தும் அது சுவிச் ஆப் நிலையில் இருந்தது . நடுவில் 2 முறை ஆன் செய்யப்பட்டு ஆப் செய்யப்பட்டது , sms மூலம் தெரிந்து கொண்டேன் . யாரோ மொபைலுக்கு ஆசைப்பட்டு எடுத்து விட்டார்கள் என்று தெரிந்தது . இனி எங்கே போய் தேடுவது . போலீஸ் காரர் , உடனே ட்ரைவரை அழைத்து நாளை விசாரணைக்கு வாருங்கள் என்று கூறினார் . வீட்டுக்கு திரும்பினேன் , மொபைல் இல்லை . குருஜி கூறினார் , நான் அகத்தியரிடம் சங்கல்பம் செய்துள்ளேன் 24 மணி

நேரத்துக்குள் உன் மொபைல் திரும்ப கிடைக்கும் என்று கூறினார் . அது அப்படி சாத்தியம் என்று மனதில் நினைத்து கொண்டேன் . மறுநாள் காலை போலீஸ் ஸ்டேஷன் சென்றேன் , ட்ரைவர் \வரவில்லை , எங்கோ சென்று விட்டான் . போலீஸ் ஸ்டேஷன் இல் காத்து கொண்டு இருந்தேன் . அப்போது வழக்கம் போல மனதில் குரல் , இப்போது அழைத்து பார் , போன் எடுப்பான் என்று தோன்றியது , உடனே அழைத்தேன் . மறுமுனையில் ஒருவன் எடுத்து இந்தியில் பேசினான் . உடனே அங்கே இருந்த ரைட்டர் அய்யாவிடம் கொடுத்து , போனை எடுத்தவன் பேசுகிறான் , நீங்களே கேளுங்கள் என்று போனை கொடுத்தேன் . அவர் அவனை போலீஸ் என்று கூறி மிரட்டினார் , அவன் இருக்கும் இடத்தை கேட்டார் , அவன் இந்தியில் கூறினான் . நான் போனை வாங்கி அவனிடம் இந்தியில் எங்கே இருக்கிறாய் என்று கேட்டேன் , அவன் வெள்ளக்கிணறு ஊருக்கும் GN மில்ஸ் பச ஸ்டாப் க்கும் இடையே ஹெல்மெட் விற்கும் கடையில் இருப்பதாக கூறினான் . உடனே நானும் போலீஸ் ரைட்டரும் சென்று பார்த்த போது , நேற்று மாலை கார் அருகில் நடந்து செல்லும் போது கார் டயர் பக்கத்திலேயே போன் தரையில் கிடந்தது , கார் ஏற்றி உடைந்து போகும் என்று நினைத்து எடுத்து வைத்து கொண்டேன் . வந்த விலைக்கு விற்று விடலாம் என்று எண்ணினேன். அதனை ரோட்டோரம் உள்ள ஹெல்மெட் கடாயில் துணியில் சுற்றி வைத்தேன் . ஆனால் என் நண்பர்கள் என்னிடம் வந்து என்னை மிரட்டி மொபைலை கொடுக்க வேண்டும் என்று கேட்டனர் , என்னை அடித்து விட்டனர் , ஆனால் நானோ நேற்று இரவு மனம் மாறி , உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எண்ணத்தை மாற்றி கொண்டேன் .. என் கன்னத்தை பாருங்கள் , அவர் அடித்த சுவடு கூட இருக்கும் . இன்று காலை நீங்கள் போலீஸ் என்று அழைத்ததால் உங்களிடம் நான் இருக்கும் இடத்தை கூறினேன் , இந்தாருங்கள் உங்கள் மொபைல் என்று கொடுத்து விட்டான் .

 

1. திருடன் மனம் மாறியது எவ்வாறு

2, போலீஸ் முன் நிற்கும் போது தொலைந்த எண்ணுக்கு அழைத்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது எவ்வாறு

3. போலீஸ் என்று கூறியதும் அவன் பயந்து இருக்கும் இடத்தை கூறி மொபைலை ஒப்படைத்தது எவ்வாறு

 

எல்லாம் உடனடியாக நடந்தது , குருஜி ஆக்னை , சங்கல்பம் , வாக்கு , அகத்தியர் பீடத்தின் மூலம் அய்யா நிகழ்த்திய செயல் , வாக்கு பலிதம் என்பது உண்மை . அகத்தியரிடம் உண்மையாக சங்கல்பம் செய்தால் , அது நிச்சயம் நடக்கும் என்பது உண்மை - இதுவே ஆதாரம்.

2 comments:

அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...